#Breaking: சீனாவிற்கு பரபரப்பு எச்சரிக்கை.. மோடியின் ஆக்ரோஷ பேச்சு.!! - Seithipunal
Seithipunal


இந்திய - சீன எல்லையில் அமைந்துள்ள லடாக் பகுதியில் கடந்த மாதம், சீன இராணுவத்தின் அத்துமீறல் நடைபெற்றது. இந்த அத்துமீறலில் 20 இந்திய இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் பலத்த இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், எத்தனை பேர் என்பது தொடர்பாக அதிகாரபூர்வ தகவல் இல்லை. 

இந்த மோதல் போக்கின் காரணமாக எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் காணவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அமைதி பேச்சுவார்த்தையில் சம்மதம் தெரிவித்த சீனா சப்தமே இல்லாமல் தனது படைகளை எல்லையில் குவித்து வந்தது அம்பலமானது. 

இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் முப்படை தளபதி பிபின் ராவத்துடன் பிரதமர் மோடியும் லடாக்கிற்கு சென்றுள்ளார். அங்கு இராணுவ வீர்ர்களை சந்தித்த மோடி, எல்லையின் நிலவரம் தொடர்பாக கேட்டறிந்து வருகிறார்.  

இதற்குப்பின் இராணுவ வீரர்களிடையே உரையாற்றுகையில், இந்தியா எதிரிகளுக்கு தக்க பாடம் புகற்றியுள்ளது. வீரம் என்பது அமைதியை நோக்கி பயணம் செய்வதாகும். இந்திய இராணுவத்தின் அக்னி ஆக்ரோஷத்தை எதிரிகள் கண்டுள்ளனர். 

இந்தியா இராணுவத்தின் வீரமும், விவேகமும் உலக நாடுகள் அறிந்தது. எதிரியின் ஒவ்வொரு திட்டத்தையும் நாம் தவிடுபொடியாக்கி வருகிறோம். கல்வான் பகுதி இந்தியாவிற்கு சொந்தமானது. நமது வீரம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. நாம் அமைதியை விரும்பினாலும், அத்துமீறலை ஏற்றுக்கொள்ள இயலாது. 

நீங்கள் பணியில் ஈடுபட்டுள்ள மலைகளின் அளவை விட, உங்களின் வீரம் உயரமானது. இராணுவ வீரர்களின் வீரத்தால் இந்தியர்கள் பெருமிதம் கொள்கின்றனர். நாடுபிடிக்கும் கொள்கைக்கு ஒட்டுமொத்த உலகமே எதிர்ப்பு தெரிவிக்கிறது. நாடுபிடிக்கும் காலங்கள் மலையேறிவிட்டது. 

லடாக் பகுதியில் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தும் பணியானது அடுத்தடுத்து நடைபெறும். வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு எனது வீரவணக்கம்.. புல்லாங்குழல் வைத்துள்ள கிருஷ்ணரை மட்டுமல்லாது, சக்ராயுதம் வைத்துள்ள கிருஷ்ணரையும் வழிபட்டு வருகிறோம். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi Latest press meet at Ladakh


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->