கட்டும் போதே இடிந்து விழுந்த ரயில்வே பாலம்.. 17 தொழிலாளர்கள் பலி.! - Seithipunal
Seithipunal


வடகிழக்கு மாநிலமான மிசோரம் மாநிலத்தின் தலைநகர் ஐஸ்வால் நகரில் இருந்து 21 கி.மீ தொலைவில் உள்ள சைராங் பகுதியில் ரயில்வே பாலம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.

இதில் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பாலம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து விரைந்து வந்த மீட்பு படையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு வருகின்றனர். இதனையடுத்து இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி நிவாரணமும் அறிவித்துள்ளார்‌. அதேபோல் மாநில அரசின் சார்பிலும் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mizoram railway bridge accident 17 death


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->