சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மினி வேன் மோதி விபத்து‌‌.. 9 பேர் உடல் நசுங்கி பலி.. 12 பேர் கவலைக்கிடம்.! - Seithipunal
Seithipunal


ஸ்ரீசைலம் கோவிலுக்கு ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் மினிவேன் வாகனத்தில் நேற்று சென்றுகொண்டிருந்தனர்.

அவர்கள் வந்த மினி வேன் இன்று அதிகாலை ஓய்வுக்காக சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது வேகமாக மோதியது. இதனால் மினி வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கொடூர விபத்தில் 9 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 12 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில் மினி வேன் ஓட்டுநர் உறங்கியதால் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mini van collided with a lorry parked on the roadside


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->