திருப்பதி : போலி பயணசீட்டு கொடுத்து பக்தர்கள் ஏமாற்றம்.! இடைத்தரகர்களுக்கு வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி கோவிலில்  நேற்று முன்தினம் காலை நெல்லூரைச் சேர்ந்த இரண்டு பேர் தரிசனம் செய்வதற்காக வந்தனர். அங்கு அவர்கள் வைத்திருந்த பயணசீட்டுகளை தேவஸ்தான ஊழியர்கள் பரிசீலனை செய்தனர். 

அப்போது, அவர்கள் பழைய சுப்ரபாத சேவைபயணசீட்டுகளின் பெயர்களை திருத்தி வழங்கப்பட்ட போலி டிக்கெட்டுகள் என்பது தெரிய வந்தது. அதன் பாய்ந்தனர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் தெரிவித்ததாவது, அந்த போலி பயணசீட்டுகளை திருப்பதியைச் சேர்ந்த இடைத்தரகர்களான சைதன்யா மற்றும் சுரேஷ் கொடுத்துள்ளார்.

இதேபோல், அடுத்த மாதம் 2-ந் தேதி நடைபெற உள்ள வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு தரிசன பயணசீட்டுகளும் ஏற்பாடு செய்துள்ளதாக கூறி மொத்தம் ரூ.48 ஆயிரம் தங்களிடம் இருந்து வாங்கி கொண்டதாக தெரிவித்தனர்.

மேலும், இரண்டு பேருக்கும் விடுதி அறைகளுக்காக ரூ.1,200 பெற்றுக்கொண்டதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, தாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்த பக்தர்கள் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து இடைத்தரகர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

middle man cheated duplicate ticket in tirupati


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->