காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினைகள் தொடர்பான கூட்டம்; 04 மாநிலங்களுக்கு அழைப்பு..! - Seithipunal
Seithipunal


உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆகிய அமைப்புகள் அவ்வப்போது கூடி காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினைகள் தொடர்பாக விவாதித்து தீர்வு கண்டு வருகின்றன. 

அந்த வகையில் காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 111-வது கூட்டம் இன்று (புதன்கிழமை ) நடக்கவுள்ளது. அத்துடன், நாளை (வியாழக்கிழமை) காவிரி மேலாண்மை ஆணையத்தின் 37-வது கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டங்களில் பங்கேற்கும்படி தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம் மற்றும் கேரளா ஆகிய காவிரியோடு தொடர்புடைய 04 மாநிலங்களுக்கும் ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் மற்றும் ஒழுங்காற்றுக்குழு தலைவர் வினீத் குப்தா ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Meeting on Cauvery water sharing issues for 2 days


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->