பழிக்கு பழி: குகி பயங்கரவாத தலைவர் சுட்டு கொலை: மீண்டும் வன்முறை பிடியில் மணிப்பூர்..!
Manipur Kuki terrorist leader shot dead in revenge
நேற்று மதியம் 02 மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் மொங்ஜாங் கிராமத்தில் கொண்டிருந்த காரின் மீது மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கி சூடு நடத்தியதில், அதில் பயணித்த 60 வயது பெண் உள்பட 04 பேர் உயிரிழந்தனர்.
துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் தானியங்கி ஆயுதங்களை பயன்படுத்தி மிக நெருங்கிய நிலையில் தாக்குத நடத்தியதாக , முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்கேற்ப, 12-க்கும் மேற்பட்ட காலி தோட்டாக்கள் அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் குகி பயங்கரவாத குழுவின் துணை தலைவர் ஆவார். குகி தேசிய அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் 17 ஆயுத குழுக்களில் இதுவும் ஒன்றாகும். இவர் தவிர, குகி தேசிய ராணுவத்தின் உறுப்பினர்கள் 02 பேரும் படுகொலை செய்யப்பட்டனர்.
விசாரணையில் ஐக்கிய குகி தேசிய விடுதலை ராணுவம் என்ற எதிரி குழுவை சேர்ந்தவர்கள் இவர்களை சுட்டு கொன்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அவர்களில் தென்கோதங் ஹாவோகிப் என்ற தாபி (வயது 48) மற்றும் சேகோகின் (வயது 34) பால்ஹிங் என்ற பெண் மற்றும் லெங்கவ்ஹாவோ (வயது 35) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால், சுராசந்த்பூர் மாவட்டத்தில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. மேலும், பழிக்கு பழியாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர். இதுபற்றி வாட்ஸ்அப் குழுக்களில் தகவல்கள் பரவி வருகின்ற நிலையில், அந்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் போலீசார் மற்றும் கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதத்தில் மெய்தி மற்றும் குகி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்து,வன்முறையாக பரவியது. அதில் இரு தரப்பிலும் 240 பேர் கொல்லப்பட்டனர். 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். இதனை தொடர்ந்து,அங்கு ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர். இருப்பினும் அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றமை மணிப்பூர் மாநில மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
English Summary
Manipur Kuki terrorist leader shot dead in revenge