மணிப்பூர் விவகாரம்.. மோடி மீது காங்கிரஸ் கடும் தாக்கு!
Manipur issue Congress launches a severe attack on Modi
மணிப்பூர் மக்களின் பிரச்சினையில் பிரதமர் மோடி அமைதியாக இருப்பது உண்மையிலேயே அதிர்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது: - 2023 மே 3-ந்தேதி இரவு முதல் மணிப்பூர் எரிகிறது. நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்.
ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துமாறு தொடக்கம் முதலே காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்தது. ஆனால் இறுதியாக பிப்ரவரி 13, 2025 அன்று ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது.ஆனால் ஜனாதிபதி ஆட்சியிலும் அங்கே எந்தவித வித்தியாசமும் இல்லை. கடந்த பிப்ரவரி மாதம் முதல்-மந்திரிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதாக காங்கிரஸ் அறிவிக்கும் வரை அது புறக்கணிக்கப்பட்டது.அதன் பிறகே முதல்-மந்திரியை ராஜினாமா செய்ய வைத்தது. மாநிலத்தின் பல பகுதிகளில் சட்டம் ஒழுங்கு இன்னும் ஆபத்தான நிலையில் உள்ளது.
பிரதமர் மோடி உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போரை அவர் சிறிது காலத்திற்கு நிறுத்தியதாக அவரது ஆதரவாளர்கள் தம்பட்டம் அடித்தனர். உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லவும், பல மாநிலங்களுக்குச் சென்று தொடக்க நிகழ்ச்சிகளை நடத்தவும் அவருக்கு நேரம் இருக்கிறது. ஆனால் மணிப்பூரின் அரசியல் தலைவர்களையோ அல்லது சிவில் சமூக அமைப்புகளையோ சந்திக்க நேரம் இல்லை.
மணிப்பூர் மக்களின் துயரங்களுக்கு பிரதமர் மோடி உணர்ச்சியின்றி இருப்பது உண்மையிலேயே அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. அவர்களின் துன்பம் மாநிலத்துக்கும் வடகிழக்கு பிராந்தியத்திற்கும் மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் தான்" இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
English Summary
Manipur issue Congress launches a severe attack on Modi