சாதி கடந்த சங்கமம்: மகாராஷ்டிராவின் சௌந்தாலா கிராமம் எடுத்த புரட்சிகர முடிவு!
maharastra Village of Soundala Declares Itself Caste Free
மகாராஷ்டிராவின் அஹில்யநகர் மாவட்டத்தில் உள்ள சௌந்தாலா கிராமம், இந்தியாவின் சமூக மாற்றத்திற்கான ஒரு உன்னத முன்னுதாரணமாக உருவெடுத்துள்ளது. "கிராமங்களே நாட்டின் முதுகெலும்பு" என்ற காந்தியடிகளின் வாக்கிற்கு இணங்க, இக்கிராமத்தினர் தங்களைச் "சாதியற்ற கிராமமாக" அதிகாரப்பூர்வமாக அறிவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.
கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், இந்திய அரசியலமைப்பின் முகவுரையை வாசித்து, சாதிப் பாகுபாடுகளை வேரறுக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிராமத் தலைவர் ஷரத் அர்கடே முன்மொழிய, பாபாசாகேப் போடக் வழிமொழிந்த இந்தத் தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள்:
"மனிதாபிமானமே எனது சாதி" என்ற தத்துவத்தின் அடிப்படையில், இனி அங்கு யாரும் சாதி, மத அடையாளங்களைப் பின்பற்ற மாட்டார்கள்.
பள்ளிகள், கோவில்கள், கிணறுகள், சமூகக் கூடங்கள் மற்றும் இடுகாடுகள் என அனைத்தும் எவ்விதப் பாகுபாடுமின்றி அனைவருக்கும் பொதுவானவை.
சமூக வலைதளங்களில் சாதி ரீதியான பதிவுகளை இடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
English Summary
maharastra Village of Soundala Declares Itself Caste Free