மஹாராஷ்டிரா வெள்ள பாதிப்பு.. பலி எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு.!
Maharashtra flood 102 peoples death
மஹாராஷ்டிரா மாநிலத்தில் மழை வெள்ள பாதிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கட்சிரோலி மற்றும் சந்திராப்பூர் மாவட்டங்களில் 20.5 மி.மீட்டர் மழை பதிவானது.
இந்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வெள்ளப்பெருக்கால் அந்த மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 20 கிராமங்கள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள நிலையில், 3,873 பேர் அங்கிருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கனமழை காரணமாக விபத்துக்களில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து மகாராஷ்டிரா மாநில பேரீடர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 14ந் தேதி வரை மழை வெள்ளம், மின்னல், நிலச்சரிவு மரம் மற்றும் பழைய கட்டிடங்கள் இடிந்து விழுந்தது உள்ளிட்ட சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Maharashtra flood 102 peoples death