நாயை மதுபோதையில் சீரழித்த காமுக கொடூரன்..!
Maharashtra dog sexual abused case court Judgement culprit Jail
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே நகரை சார்ந்த 40 வயது நபர் மதுபோதைக்கு அடிமையாகியுள்ளார். இதனால் கணவரை திருத்த நினைத்த மனைவி எடுத்த பல முயற்சிகள் தோல்வியை சந்தித்தால், இறுதியாக தனது கணவரை பிரிந்து சென்றுள்ளார்.
இதனையடுத்து, மதுபோதையில் எந்த நேரமும் இருந்து வந்த நபர், கடந்த 2020 ஆம் வருடம் ஜூலை மாதத்தில் தள்ளாடிய மதுபோதையில் வந்துள்ளார். இதன்போது, அவரின் வீட்டு வாயிலில் நாயொன்று படுத்திருந்த நிலையில், காமுடன் நாயை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
நாயின் அலறல் சத்தம் வினோதமாக இருப்பதை அறிந்து அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் பார்க்கையில் விபரீதம் புரிந்துள்ளது. இதனையடுத்து காமுகனிடம் இருந்து நாயை மீட்ட நிலையில், இது குறித்து விலங்குகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நாயை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை செய்துள்ளனர். பின்னர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, காமுகனை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், தற்போது கொடூரனுக்கு 6 மாத சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Maharashtra dog sexual abused case court Judgement culprit Jail