மத்திய பிரதேசத்தில் பரபரப்பு: போலீசாரை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து!  - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசத்தின் பெதுல் மாவட்டத்தில் இன்று அதிகாலை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் 21 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் காயமடைந்துள்ளனர். தங்களது தேர்தல் பணியை முடித்துவிட்டு போலீசார் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சொந்த மாவட்டமான ராஜ்கருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த விபத்து இன்று அதிகாலை 4 மணி அளவில் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் அவர் 5 போலீசார் மற்றும் மீதமுள்ள ஊர்க்காவல் படையினர் உள்பட மொத்தம் 40 ஜவான்களை ஏற்றி சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென கவிழ்ந்த விபத்துக்குள்ளானது. 

இதில் படுகாயம் அடைந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madhya Pradesh police Bus accident


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->