நொடிப்பொழுதில் நேர்ந்த உயிர்ச்சேதம்...! உ.பி-யில் திருமணக் குழுவினர் சென்ற வாகனம் விபத்து...! - 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி...!
Loss life instant vehicle carrying wedding party met accident UP 5 people died spot
ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் திரும்பிக் கொண்டிருந்த குடும்பத்தினரின் பயணம், திடீரென உயிரிழப்பாக மாறிய பரிதாபகரமான சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்; அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும் இருப்பது துயரத்தை மேலும் அதிகரிக்கிறது.

இந்த விபத்து உத்தரபிரதேச மாநிலம் மௌ மாவட்டத்தில், தோஹரிகாட் எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு நிகழ்ந்தது. ஜார்கண்ட் பதிவு எண்ணுடன் வந்த கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து தன் பாதையை விட்டு விலகி, எதிரே வந்த டிரெய்லர் லாரியுடன் நேருக்கு நேர் மோதியதாக அதிகாரிகள் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மோதலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்ததால், கார் முற்றிலும் சிதைந்து நொறுங்கியது. அந்த வாகனத்தில் குடும்பத்தினருடன் பயணம் செய்திருந்த செல்ல நாயும் இந்த விபத்தில் உயிரிழந்தது மனதை உருக்கும் சம்பவமாக அமைந்துள்ளது.
இந்த துயர சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவலர்கள், வழக்குப் பதிவு செய்து விபத்திற்கான காரணங்களை தீவிரமாக விசாரித்து வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Loss life instant vehicle carrying wedding party met accident UP 5 people died spot