கேரளா : விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வந்த பெண் கைது.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் அருகே சர்வதேச விமானநிலையம் செயல்படுகிறது. இந்த விமான நிலையத்தில், நேற்று இளம்பெண் ஒருவர் துபாயில் இருந்து வந்த விமானத்திலிருந்து இறங்கி வந்தார். 

அப்போது விமான நிலையத்தில் சோதனை செய்துகொண்டிருந்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பெண்ணிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது சோதனை கருவி, அந்த பெண்ணிடம் தங்கம் இருப்பதாக எச்சரிக்கை ஒலி எழுப்பியது. 

அதன் பின்னர் அதிகாரிகள் தங்கத்தை கேட்டபோது, அந்த பெண் தன்னிடம் இல்லை என்று மறுத்துள்ளார். இதைதொடர்ந்து போலீசார் அந்த பெண்ணிடம் தீவிர சோதனை மேற்கொண்டனர். 

அதில், அந்த பெண் தங்கத்தை பசைவடிவில் மாற்றி மூன்று பாக்கெட்டுகளில் அடைத்து, அதனை உள்ளாடைக்குள் வைத்து மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இதுதொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, அந்த பெண் காசர்கோடு பகுதியை சேர்ந்த ஷாலா என்றும், 19 வயதான அவர் துபாயில் இருந்து இந்த தங்கத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

அந்த பெண்ணிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் 1.9 கிலோ என்றும் இதன் மதிப்பு ரூ.1 கோடிக்கு அதிகம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala international airport woman arrested for gold kidnape


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->