மனித கறி விற்பனையா? பிரிட்ஜில் கிலோ கணக்கில் கைப்பற்றிய போலீசார் - தீவிர விசாரணை!
kerala Human Sacrifice
கேரளா மாநிலம் : நரபலி கொடுக்கப்பட்ட இரு பெண்களின் உடல் உறுப்புகள் விற்பனை செய்ய பிரிட்ஜில் வைக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எர்ணாகுளம் அருகே தமிழகத்தை சேர்ந்த பெண் உட்பட இரு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நரபலி கொடுத்த மந்திரவாதி முகமது ஷபி, மருத்துவர் பகவல்சிங், அவரது மனைவி லைலா ஆகிய மூன்று பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நரபலி கொடுக்கப்பட்ட பெண்களின் உடல் உறுப்புகள் நேர்த்தியாக வெட்டப்பட்டு இருந்தது குறித்து மந்திரவாதி முகமது ஷபியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சில மாதங்கள் பிணவறையில் அவன் பணி புரிந்ததாகவும், அப்போது உடல் உறுப்புகள் எப்படி வெட்ட வேண்டும் என்பதை தெரிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளான்.
நரபலி நடந்த மருத்துவர் பகவல் சிங் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், கிலோ கணக்கில் ஃப்ரிட்ஜில் இருந்து உடல் உறுப்புகள் மீட்கப்பட்டு இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெட்டப்பட்ட உடல் பாகங்கள் விற்பனை செய்யப் வைக்கப்பட்டுள்ளதா? அதனை வாங்க தயாராக இருந்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.