கேஜரிவால் கைது விவகாரம்: ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் அதிரடி கைது.! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


கலால் கொள்கை வழக்கில் முதலமைச்சர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து பா.ஜ.கவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பா.ஜ.க மற்றும் ஆம் ஆத்மி தலைமையகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து செல்லுமாறு வலியுறுத்தியுள்ளனர். 

இருப்பினும் ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து ஆம் ஆதி காட்சியின் தலைமையகத்தில் இருந்து பா.ஜ.க அலுவலகம் செல்லும் சாலையில் போலீசார் தடுப்பு வேலியையும் அமைத்துள்ளனர். 

நேற்று மாலை கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி பாஜகவுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kejriwal Arrest Aam Aadmi Party leaders arrested


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->