250 பயங்கரவாதிகள் செயல்பாட்டில் உள்ளனர்... காஷ்மீர் டி.ஜி.பி பரபரப்பு பேட்டி..!!
Kashmir DIG press meet about anti terrorism
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் எடுக்கப்பட்டு வரும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து டி.ஜி.பி தில்பக் சிங் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இது தொடர்பான பேட்டியில் அவர் தெரிவித்ததாவது,
காஷ்மீர் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை திருப்தியை அளிக்கிறது. பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் அனைத்தும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்பட்ட கணக்குகளின் படி, கடந்த மாதம் வரை சுமார் 250 பயங்கரவாதிகள் செயல்பாட்டில் உள்ளனர்.
கடந்த மாதத்தின் பயங்கரவாத நடவடிக்கையின் படி சுமார் 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் காஷ்மீரில் 21 பயங்கரவாதிகளும், ஜம்முவில் 4 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இதனைத்தவிர்த்து எல்லையில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட 45 பேர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் வண்ணத்தில் எந்த விதமான சம்பவமும் காஷ்மீரில் நடைபெறாதது மகிழ்ச்சியை அளிக்கிறது. பிற்காலத்தில் இது போன்ற அமைதியான சூழல் தொடர்ந்து வரும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Kashmir DIG press meet about anti terrorism