கர்நாடகா || ஹிஜாப் தடைக்கு உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு என்னவாக இருக்கும்?.. தடை நீடிக்குமா?..விலகுமா?.. - Seithipunal
Seithipunal


கர்நடாக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் அரசு பி.யூ கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் பலர் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

இந்த மனுவை விசாரணை செய்த கர்நாடக உயர்நீதிமன்றம், ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியம் இல்லை என்றும் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என்றும் கடந்த மார்ச் 15-ம் தேதி தீர்ப்பளித்தது. 

உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை  கடந்த மாதம் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. 

இந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. அங்கு கர்நாடக அரசு தரப்பிலும், இஸ்லாமிய மாணவிகள் தரப்பிலும் பரபரப்பான வாதங்கள் முன் வைக்கப்பட்டன.  

இருதரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிட்டாமல் கடந்த மாதம் 22-ம் தேதி ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் இன்று ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படுவதால் கர்நாடகா மாநிலத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் வழக்கில் அளிக்கப்பட இருக்கும் இந்த தீர்ப்பு நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnataka hijap case today judgment in supreme court


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->