3 ஆயிரம் மக்களுக்கு ஒரு மதுக்கடை! காங்கிரஸ் அரசின் அதிரடி உத்தரவால் சர்ச்சை! - Seithipunal
Seithipunal


முதல்-மந்திரி சித்தராமையா, கர்நாடக கலால் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய போது, உரிமம் புதுப்பிக்கப்படாமல் இருக்கும் 379 எம்.எஸ்.ஐ.எல். மது கடைகள் ஏலம் விடுவது, உரிமம் புதுப்பிக்கும் போது 4 மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிப்பது. 

அதற்காக கலால் சட்டம் திருத்தி மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 இன் படி 5 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட கிராம பஞ்சாயத்தில் மது கடை திறக்க உரிமம் வழங்க வேண்டும் உள்ளிட்டவை தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 

சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி 5000 மக்கள் தொகை கொண்ட கிராம பஞ்சாயத்துகளில் மதுபான கடை திறக்கலாம். இதன் அடிப்படையில் கர்நாடகா அரசு 1000 மது கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது. 

இந்நிலையில் 3 ஆயிரம் மக்கள் தொகை என கணக்கெடுக்கப்பட்டால் பல கிராம பஞ்சாயத்துகளில் கூடுதலாக மதுக்கடைகள் திறக்கப்படும். 

அரசின் இந்த முடிவுக்கு மத சார்பற்ற ஜனதா தலைவர் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Govt decides open more bars


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->