மதுபோதை, தூக்க மாத்திரை.. பெண்மணியை 3 நாட்கள் நரக வேதனைக்கு உள்ளாக்கி கொடூர கொலை செய்த சித்தப்பா..! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்பள்ளாபூர் மாவட்டத்தின் பாகேபள்ளி காரகூரு பகுதியில் கட்டிட பணியானது நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் கடந்த 7 ஆம் தேதி பெண்ணொருவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த பாகேபள்ளி காவல் துறையினர், பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். 

இந்த விசாரணையில், ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள திருப்பதி விஜிபுரா கிராமத்தை சார்ந்த 30 வயது பெண்மணி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து விஜிபுரா கிராமத்திற்கு நேரடியாக சென்ற தனிப்படை காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பெண்மணியின் சித்தப்பாவான பாபா பக்ருதீன் (வயது 50) என்பவரின் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று மேற்கொண்ட விசாரணையில், பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

இது குறித்த வாக்குமூலத்தில், " திருப்பதியை சார்ந்த தக்காளி வியாபாரியாக இருந்து வந்த பாபா பக்ருதீனுக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இவர்களில் ஒரு மனைவி விஜிபுரா கிராமத்தை சார்ந்தவர். இதனால் பக்ருதீன் அடிக்கடி விஜிபுராவிற்கு வந்து சென்ற நிலையில், மனைவியின் உறவினரான 30 வயது பெண்மணியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. உறவுமுறைப்படி பக்ருதீன் பெண்ணின் சித்தப்பா முறைகொண்டவர் ஆவார். 

அதே பெண்மணி குவைத்தில் பணியாற்றி வந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு முன்னதாக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். பின்னர் மீண்டும் குவைத்திற்கு செல்ல முடிவு செய்த நிலையில், காலாவதியாகியிருந்த பாஸ்போர்ட்டை புதுப்பிக்க ரூ.5 ஆயிரம் பணம் தேவைப்பட்டுள்ளது.

இந்த பணத்தை பெண்மணி பக்ருதீனிடம் கேட்கவே, ரேணிகுண்டாவை சார்ந்த தனது நண்பரிடம் வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதற்காக கடந்த 4 ஆம் தேதி இருவரும் ரேணிகுண்டா சென்ற நிலையில், அவரது நண்பரிடம் பணம் இல்லாதது போல பாவித்து இரவு அங்குள்ள தங்கும் விடுதியில் தங்கிவிட்டு செல்லலாம் என்று தெரிவித்துள்ளார். நம்பி சென்ற பெண்மணியை திட்டம் தீட்டி மோசம் செய்யும் எண்ணத்தில் இருந்த காமுகன், குளிர்பானத்தில் மதுவை கலந்துகொடுத்து பெண்மணியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். 

மதுபோதையில் பெண்மணி தள்ளாடினாலும், தான் உங்களுக்கு மகளை போன்றவர் என்று கூறி கதறியுள்ளார். எதையும் காதில் ஏற்றாத காமுகன் பெண்மணியை சீரழித்துவிட்டு, உனது பணத்தேவையை நான் கொடுக்கிறேன் என்று கூறியுள்ளான். பின்னர் அங்கிருந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள துமகூரு மாவட்டத்தின் பாவகடாவிற்கு அழைத்து சென்று தூக்க மாத்திரையை சாப்பாட்டில் கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். 

இறுதியாக சிக்பள்ளாபூர் பகுதிக்கு பெண்மணியை அழைத்து வந்து, மதுவை வலுக்கட்டாயமாக பெண்ணின் வாயில் ஊற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதன்பின்னர் உண்மையை வீட்டில் சொல்லிவிடுவார் என்று எண்ணி பக்ருதீன் நிர்வாணமாக மயக்க நிலையில் இருந்த பெண்ணை பலாத்காரம் செய்தவாறே கொலை செய்துள்ளான். உடலை அங்கேயே வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல வீட்டிற்கு சென்றுள்ளான். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காமுனை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Chikkaballapur girl murder mystery discovered by Police


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->