பட்டப்பகலில் பிரபல கபடி வீரரை சுட்டுக் கொன்ற மர்ம நபர்கள்.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


சர்வதேச கபடி வீரர் சந்தீப் நங்கல் மர்மநபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் மாலயன் கிராமத்தில், கபடி போட்டி நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கே வந்த மர்ம கும்பல் சர்வதேச கபடி வீரரான சந்தீப் நங்கல் ஆம்பியனை தலை மற்றும் மார்புப் பகுதியில் சுட்டுக் கொலை செய்தனர்.

சுமார் 20 குண்டுகள் அவரது உடம்பில் பாந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் சமீபகாலமாக கபடி போட்டிகளில் அதிக அளவிலான வெற்றிகளின் மூலம் புகழ் அடைந்தவர். கபடி போட்டிகளில் தனது திறமையால் சாதித்து வந்த நிலையில் கபடி கூட்டமைப்பை ஒன்றையும் நிர்வகித்து வந்தார்.

கோல் உபகரணங்கள் மற்றும் கூட்டமைப்புடன் சந்தீப் நங்கலுக்கு இருந்த பிரச்சினை காரணமாக அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kabaddi player Sandeep Nangal shoot in Punjab


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->