அந்தரத்தில் அரங்கேறிய கொடூர விபத்து., மீட்பு பணியின்போது இருவர் பலி.! - Seithipunal
Seithipunal


ஜாா்க்கண்ட் மாநிலம் : தேவ்கா் மாவட்டத்தில் உள்ள பாபா வைத்தியநாத் கோயிலின் இரு ரோப் காா்கள் அந்தரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 32 போ் மீட்கப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

தேவ்கா் நகரின் பிரபலமான பாபா வைத்தியநாத் கோயிலில் இருந்து திரிகூட் மலைப் பகுதியில் நேற்று முன்தின மாலை 2 ரோப் காா்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. 

இதன்காரணமாக சுமாா் 100 அடி உயரத்தில் அனைத்து ரோப் காா்களும் நடு வழியில் அந்தரத்தில் தொங்கி கொண்டு இருந்தன.

சிக்கிய பயணிகளை மீட்க 2 ஹெலிகாப்டா்களில் வந்த விமானப் படையினா், 32 பேரை மீட்டனர்.

இந்த விபத்தில் 13 போ் காயமடைந்தனா். அதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மீட்பு பணியின்போதே இருவர் பலியாகியுள்ளதால், பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

jharkhand rope car accident


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->