புத்தாண்டு அதுவுமா இப்படியா நடக்கணும்! அதிகாலை நடந்த கோர விபத்து! பலியான உயிர்கள்! - Seithipunal
Seithipunal


ஜார்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் கார் கட்டுப்பாட்டை இழந்து டிவைடரில் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜார்கண்ட்: ஜாம்ஷெட்பூரில் கார் கட்டுப்பாட்டை இழந்து டிவைடரில் மோதிய விபத்து நடந்த போது, காரில் ஆதித்யாபூர் பகுதியை சேர்ந்த 8 பேர் இருந்தனர். 

இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

ஜாம்ஷெட்பூர் போலீசார் அதிகாரி அஞ்சனி திவாரி இந்த விபத்து குறித்து தெரிவிக்கையில், "பிஷ்டுபூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சர்க்யூட் ஹவுஸ் அருகே இன்று அதிகாலை 5:15 மணியளவில் விபத்து ஏற்பட்டது. 

காயமடைந்த 3 பேர் எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்" என்று தெரிவித்துள்ளார்.

விபத்துக்கான காரணம். இன்னும் தெரியவில்லை என்றும், இந்த விபத்து குறித்து மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் ஜாம்ஷெட்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

 Jharkhand 6 people died in a road accident Jamshedpur


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->