கர்நாடகாவில் லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 9 பேர் பலி.! பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கர்நாடகா துமரகுரு மாவட்டம் சிரா பகுதி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் இன்று லாரி மீது ஜீப் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த பயங்கர விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்தவர்கள் அனைவரும் கூலி தொழிலாளர்கள் என்றும், அவர்கள் பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்திப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தாலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jeep lorry accident in Karnataka


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->