இண்டிகோ விமானத்தில் தீ பொறி கிளம்பியதால் அவசரமாக தரையிறக்கம்! - Seithipunal
Seithipunal


இண்டிகோ விமானம் 6E2131 விமானம் டெல்லியில் இருந்து பெங்களூருக்கு நேற்று இரவு புறப்பட்டது. புறப்பட்ட சில வினாடிகளில் வலதுபுற இன்ஜினில் தீப்பொறி வெளிப்பட்டுள்ளது. இதனை கண்ட விமானி டெல்லி விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரை இறக்கியுள்ளார். இதன் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

டெல்லி விமான நிலை மீட்பு படையினர் விமானத்தில் ஏற்பட்ட தீயினை விரைந்து செயல்பட்டு அமைத்தனர். விமானத்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் "டெல்லியில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணத்தால் தில்லியில் மீண்டும் தரையறுக்கப்பட்டது. பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். விரைவில் மாற்றி விமானம் ஏற்பாடு செய்யப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விமானத்தை விபத்து தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் விசாரணை நடத்த சிவில் விமான போக்குவரத்து இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IndiGo made an emergency landing due to fire


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->