போர் பதற்றம்! மக்கள் செய்ய கூடாது என்ன? செய்ய வேண்டியது என்ன? மத்திய அரசின் அறிவுரை இதோ! - Seithipunal
Seithipunal


இந்தியா–பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், ஆன்லைனிலும் சமூக வலைதளங்களிலும் மக்கள் எச்சரிக்கையுடன் நடக்க வேண்டிய அவசியம் குறித்து மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

இந்திய எல்லைப்பகுதியில் நிலவும் பதற்றம் தொடர்பாக இணையம் பயன்படுத்தும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களுக்கு ஈடாகாமல், உண்மைதன்மையை சரிபார்க்கும் பொறுப்புடன் நடக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சேயாய் வேண்டிய நடைமுறைகள்:

அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், உதவி எண்கள், உறுதிசெய்யப்பட்ட தகவல்களையே பகிர வேண்டும்.

எந்த செய்தியையும் பகிரும் முன் அதன் உண்மைத் தரத்தை சரிபார்க்க வேண்டும்.

தவறான செய்தி வந்தால் அதனை உடனடியாக புகாரளிக்கலாம்.

தவிர்க்கவேண்டிய செயல்கள்:

இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் தகவல்களை பகிரக்கூடாது.

உறுதிப்படுத்தப்படாத செய்திகளை பிறருக்கு அனுப்ப வேண்டாம்.

மத வெறி, வன்முறைக்கு தூண்டும் தகவல்களை பரப்புவதை தவிர்க்க வேண்டும்.

பாதுகாப்பும் பொறுப்பும் கலந்த முறையில் நாட்டின் நலனுக்காக இணையத்தை பயன்படுத்த வேண்டும் என அரசின் வேண்டுகோள் வலியுறுத்துகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India Pakistan Convict


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->