தனக்கு 02 ஓட்டு எதிர்தரப்புக்கு 02 ஒட்டு; வாக்காளர்களின் காலில் முத்தமிட்டு வாக்களிக்கும் படி, சத்தியப்பிரமாணம் வாங்கிக்கொண்ட வேட்பாளர்கள்..! - Seithipunal
Seithipunal


தெலங்கானா மாநிலத்தில் நாளை மறுநாள் நகராட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்துள்ளதால், வேட்பாளர்கள் கடந்த வாரம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள மொய்னாபாத் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் வாக்காளர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் வாக்காளர் வீட்டில் பழைய டி.வி. இருப்பதை கண்ட உடனடியாக பெரிய அளவு எல்.இ.டி. டிவி. வரவழைத்து கொடுத்துள்ளதோடு, அந்த வீட்டில் உள்ள 04 வாக்காளர்களின் கால்களில் முத்தமிட்டு தனக்கு வாக்களிக்க வேண்டும் என சத்தியம் வாங்கியுள்ளார். 

ஆனால், இதையறிந்த எதிர்தரப்பு வேட்பாளர் உடனடியாக புதியதாக ப்ரிட்ஜை வாங்கி வந்து கொடுத்து, 02 ஓட்டு அவருக்கு போடுங்கள், 02 ஓட்டு எனக்கு போடுங்கள் என கால்களில் முத்தமிட்டு சத்தியப் பிரமாணம் வாங்கியுள்ள வினோத சம்பவம் இடப்பெற்றுள்ளது.

தெலங்கானா வாக்காளர்கள் சிலர் டெல்லி, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கின்றனர். அவர்கள் வந்து வாக்களிப்பதற்காக வேட்பாளர்கள் விமான டிக்கெட், ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்து அவர்களது வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன், அவர்கள் உள்ளூருக்கு வந்து லாட்ஜில் தங்குவது, உணவு,
வாக்களித்துவிட்டு பின்னர் திரும்பி செல்வது உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் வேட்பாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை, பகல் நேரங்களில் வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்களை விட இரவு நேரங்களில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் வேளையில் ஈடுப்பட்டு வருகின்றனர். வாக்காளர்களுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்கள், பணம் ஆகியவற்றை வழங்குகின்றனர். அத்தோடு, பெண் வாக்காளர்களை கவர்வதற்காக விலை உயர்ந்த பட்டுப்புடவைகள் வழங்குகின்றனர்.

அதன்படி, ரங்க ரெட்டி மாவட்டத்தில் உள்ள செவல்லா, மொயனாபாத், ஷங்கர் பள்ளி, ஷாட் நகர், அமணக்கல்லு, இப்ராஹிம் பட்டிணம், மேட்சல், அடிலாபாத், சிந்தப்பள்ளி, எல்லம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் வழங்குகின்றதாக கூறப்படுகிறது.

அத்துடன், வேட்பாளர்கள் தான் தேர்தலில் வெற்றி பெற்றால் மேலும் பணம் வழங்குவதாகவும் வாக்காளர்களிடம் உறுதி அளிக்கின்றனர்.  மேலும் பெண் குழந்தை பிறக்கும் போது ஐந்து ஆயிரம், வீட்டில் யாராவது இறந்தால் ஐந்து ஆயிரம் வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளனர். 

மேலும், தெருக்களில் அதிகரித்து வரும் நாய் மற்றும் குரங்கு தொல்லைக்கு தீர்வு காணப்படும் எனவும் வாக்குறுதி அளித்துள்ளனர். இப்படி பல தரப்பிலிருந்தும் பணம், பரிசு பொருட்கள் குவிவதால் வாக்காளர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

In Telangana candidates kissed the feet of voters and made them take an oath to vote for them


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->