தொடர் மழை வெள்ளம் எதிரொலி.! அதிரடியாக உயர்ந்த பலி எண்ணிக்கை., வெளியான பேரதிர்ச்சி தகவல்.!!
in bihar rain people died quantity increased 73 peoples
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் தென்மேற்கு பருவமழையானது பெய்து வருகிறது. இதனால் பல மாநிலங்களின் முக்கிய நகர்கள் அனைத்தும் மழை வெள்ளத்தால் சூழப்பட்டது. இதனால் மக்கள் செய்வதறியாது திகைத்து வந்த நிலையில்., பல இடங்களில் தொடர் மழையின் எதிரொலியாக பல உயிரிழப்புகளும் அரங்கேறி வருகிறது.
இந்தியாவில் உள்ள கேரளா., கர்நாடகா., மும்பை., அசாம்., உத்திர பிரதேசம் போன்ற பல மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக மக்கள் அனைவரும் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகி அவதியுற்றனர். மேலும்., பலரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுமட்டுமல்லாது பெருமளவிற்கு சேதங்களும் ஏற்பட்டது.
இந்தியாவின் வடமாநிலங்களில் அதிகளவு கனமழையானது பெய்து வருகிறது. பீகார் மாநிலம் முழுவதிலும் மழை கொட்டி தீர்த்தத்தை அடுத்து., வெள்ளக்காடாக காட்சியளித்து., அங்குள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களை மழை நீரினால் சூழந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையானது பெருமளவு பாதிக்கப்பட்டு., மக்கள் அனைவரும் பெரும் துயருக்கு உள்ளாகினர்.
மழை வெள்ளத்தால் மக்கள் அனைவரும் சிக்கி தவித்து வரும் நிலையில்., பீகார் மாநிலத்தில் சுமார் 73 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ள நிலையில்., மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுமட்டுமல்லாது தற்போது வரை தாழ்வான பகுதியில் தேங்கிய நீர் வெளியேறாமல் இருந்து வருகிறது. மக்கள் அனைவரும் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in bihar rain people died quantity increased 73 peoples