ஆந்திராவில் அதிர்ச்சி: மாணவி கழுத்து அறுத்து கொலை காதலன் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை..!
In Andhra Pradesh a student killed herself by slitting her throat then her boyfriend committed suicide by jumping in front of a train
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் துர்காடா பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி பிளஸ்-02 படித்து வந்துள்ளார். அதே கிராமத்தை சேர்ந்தவர் 19 வயதுடைய அசோக். இருவரும் ஒரே பகுதி என்பதால் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
தசராவையொட்டி பள்ளிக்கு விடுமுறை அழிக்கப்பட்டதால், தீப்தி காக்கிநாடாவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ள நிலையில், இதனை அறிந்த அசோக்கும் அங்கு சென்றுள்ளார். அப்போது, தீப்தியை தனியாக வருமாறு அசோக் அழைத்துள்ளார். உடனே தீப்தி அந்த பகுதியில் உள்ள காட்டேறு கால்வாய்க்கரை அருகே சென்றுள்ளார்.

அந்த நேரத்தில், காதலன் அசோக், திடீரென கையில் வைத்திருந்த பிளேடால் தீப்தியின் கழுத்தை மறுத்துள்ளார்.இதனால் நிலைகுலைந்த நிலைகுலைந்த தீப்தி, ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்து, சிறிதுநேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உடனே அங்கிருந்து தப்பி சென்ற அசோக், ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் காதலியை கொன்று வாலிபர் தற்கொலை செய்ததற்காக காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் காக்கிநாடா பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
In Andhra Pradesh a student killed herself by slitting her throat then her boyfriend committed suicide by jumping in front of a train