இந்தி இலக்கியத்தில் மனோதத்துவ நாவல்களை எழுதிய நபர் பிறந்த தினம்.!! - Seithipunal
Seithipunal


இலாசந்திர ஜோஷி :

இந்தி இலக்கியத்தில் மனோதத்துவ நாவல்களை எழுதிய இலாசந்திர ஜோஷி 1903ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி உத்தராகண்ட் மாநிலத்தில் பிறந்தார்.

இவருடைய முதல் கதை வெளிவந்தபோது இவருக்கு வயது 12. 1929ஆம் ஆண்டு வெளிவந்த 'கிருணாமயீ" நாவல் இவருக்கு இலக்கிய உலகில் ஓரளவு அறிமுகத்தை பெற்றுத் தந்தது. 1940ஆம் ஆண்டு வெளியான 'சன்யாசி" நாவலால் இவர் பெரும் புகழை பெற்றார்.

லஜ்ஜா, பர்தே கீ ராணி, முக்திபத், ஜிப்ஸி, சுபஹ், நிர்வாசித், பிரேத் அவுர் சாயா உள்ளிட்ட இவரது நாவல்கள் மிகவும் பிரபலமாகும்.

இவர் தாகூரின் படைப்புகளை இந்தியில் மொழிபெயர்த்துள்ளார். இந்தி இலக்கிய உலகின் தலைசிறந்த படைப்பாளியாகப் போற்றப்பட்ட இலாசந்திர ஜோஷி 1982ஆம் ஆண்டு மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ilachandra joshi birthday 2021


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->