சென்னையில் துயரம்: தாய் இறந்த சோகம்; விளையாட்டில் தேசிய அளவில் சாதனைகளை படைத்துள்ள 16 வயது மகன் தூக்கிட்டு தற்கொலை..!
16 years old son commits suicide after mothers death in Kodungaiyu
சென்னை கொடுங்கையூர் யூனியன் கார்ப்பரேட் காலனி 3வது தெருவை சேர்ந்தவர் உதயசங்கர் வயது 38. மெடிக்கல் பிரதிநிதியாக உள்ளார். இவரின் மனைவி நிஷாந்தி வயது 36. இவர்களது மகன் திரூஸ் (16), மகள் ஹர்ஷிதா (14). ஆகிய இருவரும் உள்ளனர். இதில் மகன் திரூஸ் பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில்11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இவர் சிலம்பம், கராத்தே உள்ளிட்ட கலைகளில் தேர்ச்சிபெற்று தேசிய அளவில் பல பதக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில், அம்மா நிஷாந்தி ரத்த புற்றுநோயால் பல வருடங்களாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த மாதம் 24-ஆம் தேதி மரணடடைந்துள்ளார். அன்றிலிருந்து மகன் திரூஸ் சோகத்துடன் காணப்பட்டதுடன் அம்மாவை பார்க்கவேண்டும் என்று அடிக்கடி கூறி தந்தையிடம் அழுதுள்ளார். தந்தை மகனுக்கு ஆறுதல் தெரிவித்து தேற்றி வந்துள்ளார். இருப்பினும் அம்மா நினைவில் இருந்து மகன் மீளமுடியாமல் மனஉளைச்சலில் தவித்து வந்துள்ளார்.
இந்தநிலையில், வழக்கம்போல் உதயசங்கர் பணிக்கு சென்றுவிட்ட நிலையில், நேற்றிரவு தங்கை ஷர்ஷிதாவை டியூசனுக்கு அனுப்பிவிட்டு திரூஸ் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். டியூசன் முடிந்து இரவு 09 மணி அளவில் ஹர்ஷிதா வீட்டுக்கு வந்து கதவை தட்டியபோது கதவை திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தங்கை ஹர்ஷிதா கூச்சல் போட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர்.
பின்னர் அவர்கள் கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே தீரூஸ் தனது தாயின் புடவையால் மின்விசிறியில் தூக்கிட்டு மயக்கம் அடைந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவர்களை வரவழைத்து சோதனை செய்த போது திரூஸ் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிய வந்துள்ளது.
இது குறித்து தகவல் கிடைத்ததும் கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையிலான போலீசார் சென்று திரூஸ் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த திரூஸ் படிப்பு மற்றும் கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட கலைகளில் தேர்ச்சி பெற்று தேசிய அளவில் பல சாதனைகளை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தனது தாய் இறந்த சோகத்தில் மகனும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
16 years old son commits suicide after mothers death in Kodungaiyu