கோரமங்களாவில் நடு இரவில் நடந்த ‘போலி ரெய்டு’- 4 ஊழியர்களை கடத்தி ரூ.8.90 லட்சம் பறிப்பு...! - Seithipunal
Seithipunal


பெங்களூரு கோரமங்களாவில் திரில்லர் சம்பவம் – போலி போலீசாரின் கையில் சிக்கிய கால்சென்டர் ஊழியர்கள்.உண்மையில் ஒருவர் ரியல் போலீஸ் பெங்களூரு கோரமங்களா போலீஸ் எல்லைக்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கிற கால்சென்டர் நிறுவனத்தில் கடந்த 21-ஆம் தேதி நள்ளிரவில் நான்கு ஊழியர்கள் வழக்கம்போல பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அந்த சமயத்தில், “நாங்கள் போலீஸ்” என அடையாளம் கூறிய மர்மநபர்கள் திடீரென அலுவலகத்துக்குள் நுழைந்தனர்.“ஒரு முக்கிய வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்; உடனே காவல் நிலையத்திற்கு வர வேண்டும்” என்று கூறி, நான்கு பேரையும் இரண்டு கார்களில் அழைத்துச் சென்றனர்.

ஆனால், போலீஸ் நிலையம் நோக்கி அல்ல… வெறிச்சோடிய இடத்திற்கே அவர்கள் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அங்கு வைத்து ஊழியர்களை மிரட்டிய மர்மக்கும்பல், “ரூ.25 லட்சம் கொடு, இல்லையெனில் உயிருக்கு ஆபத்து!” என்று பயமுறுத்தியது. ஊழியர்கள் அளவுக்கு மீறிய பணம் இல்லை என்றதும், அவர்கள் வங்கி கணக்குகளில் இருந்ததை ஆன்லைனில் திருட்டுத்தனமாக மாற்றி, உறவினர் கணக்குகளுக்கே பரிமாறினர். இதன் மூலம் ரூ.8.90 லட்சத்தை கும்பல் பறித்தது. மேலும் ரூ.25 லட்சம் தரும்படி தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர்.
போலீஸாரின் அதிரடி நடவடிக்கை
ஊழியர்கள் கடத்தப்பட்ட சம்பவம் கோரமங்களா போலீசாரிடம் விரைவில் சென்றடைந்தது. துணை போலீஸ் கமிஷனர் சாரா பாத்திமா தனிப்படையை அமைத்து உடனடி ரெய்டு ஆணையை பிறப்பித்தார்.12 மணி நேரத்துக்குள் கும்பலின் இருப்பிடம் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு மர்மக்கும்பலை வலைவீசி கைது செய்து நான்கு ஊழியர்களையும் பாதுகாப்பாக மீட்டனர்.
அதிர்ச்சியின் உச்சம் – காவலரே கொள்ளைக்காரன்.
கைது செய்யப்பட்ட 8 பேரில் ஒருவர் உண்மையிலேயே போலீஸ் என்பதே போலீசாரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
அவரது பெயர் சலபதி, கோலார் மாவட்டம் மாலூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் காவலர்.மற்ற 7 பேர், பவன், பாரத், பிரசன்னா, ஆதிக், ஜபியுல்லா உள்ளிட்டோர், அனைவரும் கோலார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
கதையின் பின்னணி – கடன் சுமையை முடிக்ககூட்டணி
ரியல்எஸ்டேட் தொழிலில் கோடிக்கணக்கில் கடன் சிக்கலில் சிக்கிய பவன், தனது நண்பன் போலீஸ்காரர் சலபதியுடன் சேர்ந்து, “போலி போலீஸ் ரெய்டு” என்ற திட்டத்தை உருவாக்கியது.பெங்களூருவில் ஏற்கனவே பல போலி கால்சென்டர்கள் இருப்பதால், அதையே பயன்படுத்தி “நீங்கள் போலி கால்சென்டரில் வேலை செய்கிறீர்கள்” என்ற பெயரில் ஊழியர்களை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டனர்.
பறிமுதல் & வழக்கு, கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.8.90 லட்சம்,கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு கார்கள்,பறிமுதல் செய்யப்பட்டன.இந்த 8 பேருக்கும் கோரமங்களா போலீசார் பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மக்களை பாதுகாக்க வேண்டிய காவலரே கடத்தல் கும்பலின் மூளையாக இருந்தது பெங்களூருவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

fake raid middle night Koramangala 4 employees kidnapped and Rs 8point90 lakhs seized


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->