IFS அதிகாரி தொடர்ந்த வழக்கு...! 14 நீதிபதிகள் விலகல்! நீதித்துறை வரலாற்றில் முதல்முறை! - Seithipunal
Seithipunal


உத்தரகாண்டைச் சேர்ந்த இந்திய வனத்துறை (IFS) அதிகாரி சஞ்சீவ் சதுர்வேதி, அரசின் பல்வேறு நிலைகளில் நடைபெறும் ஊழலுக்கு எதிராக தைரியமாக குரல் கொடுப்பவராகப் பெயர் பெற்றவர். ஊழலை வெளிச்சமிடும் நோக்கில் அவர் பல வழக்குகளை உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் தொடர்ந்து வருகிறார். ஆனால், அந்த வழக்குகள் சரியாக விசாரணைக்கு வராமல் தடைபடுவது குறித்து சட்ட வட்டாரங்களில் பெரும் கவலை நிலவுகிறது.

மத்திய அரசு ஊழியர்களின் குறைகளை தீர்க்கும் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் (CAT) குறித்து சஞ்சீவ் சதுர்வேதி தாக்கல் செய்த வழக்கும் அதில் ஒன்றாகும். இந்த வழக்கை விசாரித்துவரும் உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற நீதிபதி அலோக் வர்மா, திடீரென விசாரணையிலிருந்து விலகியுள்ளார். இது சதுர்வேதியின் வழக்குகளில் இருந்து விலகும் **16வது நீதிபதி** என குறிப்பிடப்படுகிறது.

இதற்கு முன் செப்டம்பர் 26ஆம் தேதி நீதிபதி ரவீந்திர மைதானியும் எந்தக் காரணமும் கூறாமல் வழக்கிலிருந்து விலகியிருந்தார். இதுவரை சதுர்வேதி தாக்கல் செய்த பல வழக்குகளில், உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள், உயர் நீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள், கீழமை நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் மற்றும் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் எட்டு நீதிபதிகள் விலகியுள்ளனர்.

நீதிபதிகள் காரணம் குறிப்பிடாமல் வழக்கிலிருந்து விலகுவது, ஊழல் தொடர்பான வழக்குகளை தாமதப்படுத்தி மூடி மறைக்கும் முயற்சியா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஒரு அதிகாரியின் வழக்குகளில் இத்தனை நீதிபதிகள் விலகியிருப்பது, இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அதிர்ச்சிகரமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IFS corruption case High Court


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->