மனைவி இறந்ததாக முகநூலில் பதிவிட்ட கணவன்- ஆத்திரத்தில் கள்ள காதலன் செய்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள திருப்பதி மாவட்டம் ரங்கம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வம்சி. ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முகநூல் மூலம் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கரீம் நகரை சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. 

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இதற்கிடையே வம்சியின் நண்பரான அன்வர் வம்சியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது வம்சியின் மனைவிக்கும் அனைவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் கள்ளக்காதல் விவகாரம் சில மாதங்களுக்கு முன்பு வம்சிக்கு தெரிய வந்ததால் தனது மனைவியை எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த மாதம் வம்சியின் மனைவி தனது தாய் வீட்டிற்கு செல்வதாக வம்சியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால், அவர் மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த வம்சி இது தொடர்பாக விசாரணை செய்ததில் தனது மனைவி அன்வருடன் குடும்பம் நடத்தி வருவது தெரியவந்தது. 

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த வம்சி உள்ளூரில் வசிப்பதற்கு பிடிக்காமல் பெங்களூருக்கு சென்று ஆட்டோ ஓட்டி வந்தார். அப்போது, அவர் முகநூலில் அன்வர் வம்சியின் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்கள் பதிவிடப்பட்டு இருந்தது. 

இதைப்பார்த்த வம்சி இருவரும் இறந்துவிட்டதாகவும் உங்களுடைய ஆன்மா சாந்தி அடையட்டும் என்று பதிவிட்டு இருந்தார். இதனால், ஆத்திரமடைந்த அன்வர் பெங்களூருக்கு சென்று வம்சியை கடத்தி திருப்பதிக்கு கொண்டு வந்தார். அங்கு வம்சிக்கு மொட்டை அடித்துள்ளார்.

இதனை அன்வர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்தவ ஆட்டோ ஓட்டுனர்கள் வம்சிக்கு மொட்டை அடித்து கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கருதி போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆனால் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட வம்சி பெங்களூரில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

husband post on facebook wife is died


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->