ரூ.100 கோடி மதிப்பிலான ஹெராயின் போதை பொருட்களை பறிமுதல் செய்தது டெல்லி காவல்துறை.! - Seithipunal
Seithipunal


ரூபாய் 100 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருட்களை டெல்லியில் தேசிய போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

டெல்லி ஜாமியா நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளுக்கு புகார் கிடைத்ததை அடுத்து அப்பகுதியில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் ஒரு குடியிருப்பு வீட்டில் போதைப் பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்த அதிகாரிகள், அந்த வீட்டில் இருந்த 50 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்தனர். மேலும் 40 லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

பறிமுதல் செய்த போதை பொருளின் மதிப்பு 100 கோடி ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த போதை பொருள் சம்மந்தமாக ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Heroin drugs seized in Delhi


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->