அரிசி உள்ளிட்ட பொருட்களுக்கு இன்று முதல் ஜிஎஸ்டி வரி.. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்பு.? - Seithipunal
Seithipunal


இந்திய மத்திய நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கீழ் 47வது ஜிஎஸ்டி கவுன்சிலிங் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன் சண்டிகரில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேனா மை முதல் ஹோட்டல் வாடகை வரைக்கும் உள்ள பல்வேறு சேவைகளுக்கான ஜிஎஸ்டி வரி விகிதம் உயர்த்தப்பட்டது. அதிலும் LED விளக்குகள், மின்விளக்குகள், கத்தி பிளேடு போன்ற பொருட்கள் மீதான வரை 18% ஆக உயர்த்தப்பட்டது. 

அதே நேரத்தில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யக்கூடிய அரிசி, பருப்பு, தயிர், லஸ்ஸி உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 5% உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் அரிசி உள்ளிட்ட பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்யக்கூடிய பொருட்களுக்கு மீதான 5% ஜிஎஸ்டி வரி இன்று முதல் அமலுக்கு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

GST tax on products including rice from today


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->