மேக்அப் போட்டு மணப்பெண் முகம் வீங்கியதால்.. திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை.!
groom called off the wedding because the bride's face was swollen after putting on makeup
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹசன் மாவட்டம் அரசிகிரா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் கடந்த வாரம் அந்த பெண் பியூட்டி பார்லர் சென்று மேக்கப் போட்டு உள்ளார்.
அப்போது திருமணத்திற்கு வித்தியாசமாக மேக்கப் போட வேண்டும் என்று எண்ணிய மணமகள் புதிய முறையை பயன்படுத்துமாறு கேட்டுள்ளார்.
இதனையடுத்து பியூட்டி பார்லர் உரிமையாளர் கங்கா தான் புதிய வகையிலான மேக்கப் முறையை கற்றுக் கொண்டுள்ளதாகவும் அதனை முயற்சி செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இதனை நம்பி மணப்பெண்ணும் தனது முகத்தில் புதிய வகை மேக்கப் போட அனுமதித்துள்ளார்.
அந்த வகையில் மணப்பெண்ணின் முகத்தில் புதிய வகை மேக்கப் போட்டு அதன் பின்னர் முகத்தை மூடி நீராவியில் ஸ்டீம் செய்துள்ளனர். இந்த நிலையில் ஸ்கீம் செய்த பின்னர் மணப்பெண்ணின் முகத்தில் தீக்காயங்களுடன் தழும்புகள் ஏற்பட்டு முகம் வீங்கி கருப்பு நிறமாக மாறி உள்ளது.
இதனையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட மணப்பெண் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனை அடுத்து மணப்பெண்ணின் முகத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டு மணப்பெண்ணின் முகம் மாறியதால் மாப்பிள்ளை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். மேலும், இரு வீட்டாரிடம் ஏற்பட்ட பிரச்சனையில் திருமணமும் நின்றுவிட்டது.
மேலும், தவறாக மேக்கப் போட்டு மணப்பெண்ணின் முகம் பாதிப்பிற்கு காரணமான பியூட்டி பார்லர் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
English Summary
groom called off the wedding because the bride's face was swollen after putting on makeup