பொய் வழக்கு பதிவு செய்வதாக மிரட்டி லஞ்சம் - கையும் களவுமாக சிக்கிய வேளாண் அதிகாரி.! - Seithipunal
Seithipunal


தெலங்கானா மாநிலத்தில் உள்ள, ஐதராபாத் நகரில் காமரெட்டி பகுதியில் உள்ள பிச்சுகுந்தா மண்டலத்தில் மண்டல வேளாண் அதிகாரியாக பணிபுரிபவர் போச்சையா. 

இவர் உரக்கடை உரிமையாளர் கங்காதரிடம் பொய் வழக்குப் பதிவு செய்வதாக மிரட்டி பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இது தொடர்பாக கங்காதர் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிட்ம் புகார் செய்தார். 

அந்தப் புகாரின் படி போச்சையாவைப் பிடிக்க ஏசிபி அதிகாரிகள் முடிவு செய்து, அதன் படி கங்காதர், நேற்று பேருந்து நிலையத்தில் வைத்து பணத்தைக் கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த ஏசிபி அதிகாரிகள் போச்சையாவை கையும், களவுமாக பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் ஐதராபாத் அரசு துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

government officer arrested for bribe in telangana


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->