இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்! “அன்னபூர்த்தி” தானிய ஏடிஎம்: இனி 24 மணிநேரமும் அரிசி வாங்கலாம்! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பொது விநியோக திட்டத்தை மேலும் வெளிப்படையாகவும், தொழில்நுட்ப வசதியுடனும் செயல்படுத்தும் நோக்கில் “அன்னபூர்த்தி” தானிய ஏடிஎம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய உணவுப் பாதுகாப்புத் துறையும், ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டமும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த முயற்சி, ரேஷன் விநியோக முறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமாக ரேஷன் கடைகளில் நீண்ட வரிசை, ஊழியர் பற்றாக்குறை, எடையில் முறைகேடு, தரம் குறித்த புகார்கள் போன்ற பிரச்சினைகள் நிலவிவந்தன. இவற்றிற்கு நிரந்தரத் தீர்வாக இந்த தானிய ஏடிஎம் அமைப்பு கொண்டு வரப்பட்டுள்ளது.

வங்கிகளில் பயன்படுத்தும் ஏடிஎம் இயந்திரத்தைப் போன்ற வடிவமைப்பில் இந்த தானிய ஏடிஎம் உருவாக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் தங்களது ரேஷன் கார்டு எண் அல்லது ஆதார் எண்ணை உள்ளிட்டு, பின்னர் விரல் ரேகை அல்லது கண் விழித்திரை மூலம் பயோமெட்ரிக் சரிபார்ப்பு செய்ய வேண்டும்.

சரிபார்ப்பு முடிந்ததும், அந்த மாதத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட தானியங்களின் விவரம் திரையில் தோன்றும். தேவையான அளவைத் தேர்வு செய்தவுடன், இயந்திரத்தின் கீழ் பகுதியில் பையை வைத்தால் சில விநாடிகளில் துல்லியமான எடையில் தானியம் வழங்கப்படும்.

  • 24 மணி நேரமும் செயல்படும் வசதி

  • ஒரு நிமிடத்தில் 25 முதல் 50 கிலோ வரை தானியம் வழங்கும் திறன்

  • 99.9% துல்லியமான எடை

  • குறைந்த மின்சார நுகர்வு

  • சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் சுற்றுச்சூழல் நட்பு அமைப்பு

  • பயோமெட்ரிக் முறையால் போலி ரேஷன் கார்டுகள் தடுப்பு

இந்த வசதி மூலம் கூலித் தொழிலாளர்கள், அலுவலக பணியாளர்கள் போன்றோர் தங்களுக்கு வசதியான நேரத்தில் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த திட்டம் முதலில் ஹரியானா மாநிலம் குருகிராமில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர் ஒடிசா, உத்தரப் பிரதேசம், குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.இந்த திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அமலில் உள்ளது. இருப்பினும், தானிய ஏடிஎம் அமைப்பை படிப்படியாக அறிமுகப்படுத்துவது குறித்து உணவுத் துறை ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

மொத்தத்தில், “அன்னபூர்த்தி” தானிய ஏடிஎம் திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால், பொதுமக்கள் வரிசையில் நிற்காமல் துல்லியமான எடையில் ரேஷன் பொருட்களை பெறும் புதிய வசதி உருவாகும். ஏழை, எளிய மக்களின் தேவைகளை விரைவாகவும் வெளிப்படையாகவும் பூர்த்தி செய்யும் முக்கிய தொழில்நுட்ப முன்னேற்றமாக இது பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Good news for housewives Annapurthi grain ATM Now you can buy rice 24 hours a day


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->