தேமுதிக வரவால் திமுக கூட்டணியில் அதிருப்தி? –வார்த்தை விட்ட மதிமுக! கட் அண்ட் ரைட்டாக பேசிய திமுக! அதிர்ச்சியில் வைகோ!
Dissatisfaction in DMK alliance due to DMDK entry MDMK has spoken out DMK spoke cut and right Vaiko in shock
2026 சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தலைமையிலான கூட்டணி இதுவரை அமைதியாக பயணித்து வந்தது. ஆனால் சமீபத்தில் கூட்டணியில் இணைந்த தேமுதிகவுக்கு 6 சட்டமன்ற தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா இடமும் ஒதுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியதைத் தொடர்ந்து, கூட்டணிக்குள் அதிருப்திக் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன.
இந்த தேர்தலில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் பெரிய கூட்டணியை அமைத்து களமிறங்குகிறது. இதற்கு மேலாக பிரேமலதா விஜயகாந்தின் தேமுதிகவும் அண்மையில் இணைந்துள்ளது.
2021 தேர்தலில் 174 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, இந்த முறை 170 தொகுதிகளுக்கு குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள இடங்களை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
வெளியாகியுள்ள தகவல்களின் படி:
-
திமுக – 170
-
காங்கிரஸ் – 25
-
விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் – தலா 6
-
மக்கள் நீதி மய்யம் – 3
-
தேமுதிக – 6 + 1 ராஜ்யசபா
-
ஓபிஎஸ் தரப்பு – 4
-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – 3
-
மனிதநேய மக்கள் கட்சி – 2
மேலும், கடைசி நேர கூட்டணிக்காக 2–3 தொகுதிகள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கணக்கில் தான் சிக்கல் உருவாகியுள்ளது. குறிப்பாக வைகோ தலைமையிலான மதிமுக அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த தேர்தலில் மதிமுகவுக்கு மாநிலங்களவை (ராஜ்யசபா) இடம் வழங்கப்பட்டது. ஆனால் சமீபத்திய எம்பி தேர்தலில் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் தேமுதிகவுக்கு ராஜ்யசபா இடம் ஒதுக்கப்படலாம் என்ற தகவல், மதிமுக தரப்பில் அதிருப்தியை அதிகரித்துள்ளது.
மதிமுக தரப்பு திமுகவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் 10 சட்டமன்ற தொகுதிகள் கோரியதாகவும், குறைந்தது 7 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா இடம் வேண்டும் என வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் திமுக 5 தொகுதிகள் மட்டுமே வழங்க முன்வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் முதற்கட்ட பேச்சுவார்த்தை எதிர்பார்த்த முடிவை எட்டவில்லை என கூறப்படுகிறது.
தேமுதிக மற்றும் புதிய கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்கப்படுவதால், ஏற்கனவே கூட்டணியில் இருந்த கட்சிகளின் தொகுதிகள் குறைய வாய்ப்பு உள்ளது. இதுவும் உள்ளக அதிருப்திக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
திமுக தரப்பில், கூட்டணியை சமநிலையுடன் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் பெரிய பிளவு ஏற்படாதவாறு சமரசம் காண முயற்சி நடக்கிறது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மொத்தத்தில், தேமுதிக வரவு திமுக கூட்டணிக்கு வாக்கு கணக்கில் பலமாக அமையுமா அல்லது உள்ளக சிக்கல்களை உருவாக்குமா என்பது வரும் நாட்களில் தெளிவாகும். தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் வரை கூட்டணிக்குள் பரபரப்பு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Dissatisfaction in DMK alliance due to DMDK entry MDMK has spoken out DMK spoke cut and right Vaiko in shock