ஆந்திரா: சென்னை ரயிலில் கடத்திய ரூ.4.21 கோடி தங்கம் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


ஆந்திர பிரதேச மாநிலத்தில் சென்னை ரயிலில் கடத்திவரப்பட்ட ரூபாய் 4 கோடி மதிப்பிலான தங்கத்தை டிஆர்ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் ஸ்ரீகாகுளம் ரயில் நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக டிஆர்ஐ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து அதிகாரிகள் நேற்று முன்தினம் ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது ஹவுரா-சென்னை மெயில் ரயிலில் கொல்கத்தாவில் இருந்து வந்த ஒரு பயணியிடம் சந்தேகத்தின் அடிப்படையில் அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில், அவரது பையில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த ரூபாய் 4.21 கோடி மதிப்பிலான 7.396 கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தியதில், வங்கதேசத்தில் இருந்து தங்கம் கடத்தி வரப்பட்டு, அதனை கொல்கத்தாவில் உள்ள பார்களில் உருக்கி மீண்டும் தங்க கட்டிகளாக மாற்றப்பட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அதிகாரிகள், இந்த தங்கம் கடத்தல் தொடர்பாக இரண்டு பேரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று டிஆர்ஐ அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gold worth Rs 4 crore 21 thousand seized at Srikakulam railway station in Andhra


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->