பயணிகள் கவனத்திற்கு! ரயில்வே மேம்பாட்டு பணி...! - 13 ரயில்களின் சேவை மாற்றம்...!
Attention Passengers Railway Development Works Service Changes 13 Trains
ஜோலார்பேட்டை -தொட்டம்பட்டி ரயில் பாதையில் தானியங்கி சிக்னல் அமைக்கும் மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், நாளை மொத்தம் 13 ரயில்களின் சேவையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, அரக்கோணம் - சேலம் மற்றும் சேலம் - அரக்கோணம் வழித்தடங்களில் இயக்கப்படும் மெமு விரைவு ரயில்கள், கோவை - சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை சென்ட்ரல் - கோவை இடையிலான இன்டர்சிட்டி விரைவு ரயில்கள், மேலும் ஈரோடு - ஜோலார்பேட்டை மற்றும் ஜோலார்பேட்டை - ஈரோடு பயணிகள் ரயில்கள் என மொத்தம் 6 ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுகின்றன.
மேலும், வந்தே பாரத் ரயில் சேவையிலும் மாற்றம் செய்யப்பட்டு, சென்னை சென்ட்ரலிலிருந்து கோவைக்கு பிற்பகல் 2.15 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில், இரண்டு மணி நேரம் தாமதமாக மாலை 4.15 மணிக்கு இயக்கப்படும்.
அதேபோல், கோவை - சென்னை சென்ட்ரல் விரைவு ரயிலும் இரண்டு மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மேலும் இரண்டு விரைவு ரயில்கள் வழியிலேயே இடைவிடை நிறுத்தங்களுடன் மெதுவாக இயக்கப்படவுள்ளன. கூடுதலாக, மூன்று ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.
தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பின் படி, இந்த தற்காலிக மாற்றங்கள் அனைத்தும் பயணிகளின் பாதுகாப்பையும், ரயில்வே சேவையின் நவீனமயத்தையும் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Attention Passengers Railway Development Works Service Changes 13 Trains