தன்னை கழட்டிவிட்ட காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற காதலன்.!
Girlfriend breakup with relationship boy killed
தன்னை விட்டு பிரிந்து சென்ற காதலியை காதலன் ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி பாரத் நகர் பகுதியை சேர்ந்த சோனு என்ற இளைஞரும், சல்மா என்ற இளம் பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கிடையே மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில் இளம்பெண் காதலை முடித்துக் கொள்ள முடிவு செய்தார்.
இதனையடுத்து தனது முடிவை காதலனிடம் தெரிவித்துவிட்டு பிரிந்து சென்றுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியும், ஆத்திரமடைந்த சோனு, காதலி சல்மாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, தனது காதலியை பின்தொடர்ந்து தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரை சுட்டு கொன்று உள்ளார்.
இதனையடுத்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் தப்பித்து செல்ல முயன்ற காதலன் சோனுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்
English Summary
Girlfriend breakup with relationship boy killed