திருமணமான 8 மாதத்தில் மகளைப் பார்க்க கூடாத நிலையில் பார்த்த தந்தை.. பதற வைக்கும் சம்பவம்.!!
girl suicide in up
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் வசித்து வருபவர் விஷ்ணு. இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நிஷா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிஷாவின் தந்தை லட்சுமிநாராயணன் மகளைக் காண அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு நிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளார்.
இதையடுத்து இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் நிஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நிஷாவின் தந்தை தன் மகள் தன் மகளை வரதட்சணை கேட்டு அவரது கணவர் மற்றும் மாமனார் கொடுமைப் படுத்தியதாகவும் அதனால்தான் எனது மகள் இத்தகைய முடிவை எடுத்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நிஷாவின் கணவன் விஷ்ணு மற்றும் அவரது மாமனார் தயாளன் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.