நடுரோட்டில் சில்மிஷம் செய்த இளைஞரை புரட்டி எடுத்த இளம்பெண்.!! - Seithipunal
Seithipunal


ஆந்திரா மாநிலம் விஜயவாடாவை அடுத்த கண்ணாவரம் விமான நிலையத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு பணி முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். 

அப்போது விமான நிலையம் அருகே பெண் ஊழியரை வாலிபர் ஒருவர் தடுத்து நிறுத்தி சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் ஊழியர் இருசக்கர வாகனத்தை விட்டு இறங்கி கீழே கிடந்த கட்டையை எடுத்து அந்த வாலிபரை அடி அடி என அடித்து உதைத்துள்ளார். மேலும், உங்களைப் போன்றவர்களால் தான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போகிறது. எதற்காக என்னை வழிமறித்து சில்மிஷம் செய்தார் என கேட்டு நடுரோட்டில் வைத்து கட்டையால் அடித்து உதைத்துள்ளார். 

வலி தாங்க முடியாமல் அந்த வாலிபர் பெண்ணிடம் மன்னிப்பு கேட்டார். அதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர். இந்த வீடியோ தற்போது ஆந்திர மாநில மகளிர் ஆணைய தலைவி வசி ரெட்டி பத்மா, பெண்களை சீண்டுபவர்களுக்கு இது போன்ற பாடம் புகட்டுவது சரியே, இதுபோன்ற செயலில் பெண்கள் துணிச்சலாக ஈடுபட வேண்டுமென தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

girl attacked the youth on road


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->