மேற்கு வங்காளம் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை.!
four peoples sucide at same family in west bengal
மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள பஸ்சிம் பர்தாமன் மாவட்டம் குறிலியடங்கா பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பிணமாக கிடந்துள்ளனர். இவர்கள் வீட்டில் இருந்து வெளியில் வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அதன் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த போது கணவர் தூக்கில் தொங்கிய நிலையிலும், மனைவி மற்றும் குழந்தைகள் படுக்கையில் உயிரிழந்த நிலையிலும் கிடந்துள்ளனர். இதையடுத்து போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் அவர்கள் சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை செய்தபோது, "சொத்து பிரச்சினை தொடர்பாக உறவினர்கள், அந்தக் குடும்பத்தினருக்கு தொல்லை கொடுத்து வந்ததாக தெரிய வந்தது.
மேலும், அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
English Summary
four peoples sucide at same family in west bengal