கேமராவுக்கு பெயிண்ட் அடித்து ஏடிஎம்மில் கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாவட்டத்தில் உள்ள, பெலகாவி மாவட்டம் அங்காளியில் உள்ள ஆக்சிஸ் வங்கி ஏடிஎம் மற்றும் அம்பேத்கர் நகரில் உள்ள எஸ்பிஐ வங்கி உள்ளிட்ட ஏடிஎம்களில் நேற்று இரவு முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் ஏடிஎம் மையங்களை கியாஸ் கட்டர் மூலம் வெட்டி ரூ.40 லட்சம் திருடியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து காவல் துணைக் கண்காணிப்பாளர் வேணுகோபால் தெரிவிக்கையில், "திருடர்கள் கொள்ளைக்கு முன்பு ஏடிஎம்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை கருப்பு பெயிண்ட் பயன்படுத்தி மறைத்துள்ளனர். 

தொழில்முறை கொள்ளையர்கள் இந்த குற்றத்தில் ஈடுபட்டது போல் தெரிகிறது. குற்றவாளிகளைப் பிடிக்க 25 போலீஸார் கொண்ட இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொள்ளையடிக்கப்படும் ஏடிஎம்களில் பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்படவில்லை. 

பாதுகாப்பு ஆட்கள் இல்லாத ஏடிஎம் மையங்களை குறிவைத்து இந்த கொள்ளையை நடத்தியுள்ளனர்” என்று தெரிவித்தார். ஒரே நேரத்தில் 2 ஏடிஎம்களில் இருந்து 40 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four peoples money robbery in atm at karnataga


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->