70 கோடி பண மோசடி - பாஜக மாநில துணைத்தலைவர் உள்பட 4 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


70 கோடி பண மோசடி - பாஜக மாநில துணைத்தலைவர் உள்பட 4 பேர் கைது.!

இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹரிந்தர் பால் சிங். தொழிலதிபரான இவர், தொழில் வளர்ச்சிக்காகச் சிங்கப்பூர் நிதி நிறுவனத்திடம் இருந்து ரூபாய் 70 கோடி கடனாகப் பெற்றுத் தருவதாகக் கூறி தன்னை சிலர் ஏமாற்றியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்தப் புகாரின் படி, வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தியதில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர் ராஜசேகர் என்பவரை மத்திய குற்றப்பிரிவு மோசடி மற்றும் ஆவணங்கள் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். 

இவருடன் சேர்ந்து ஆலப்பாக்கம் சேர்ந்த ரேஷ்மின், ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த ராமு, போரூரைச் சேர்ந்த தசரதன் என்று மொத்தம் நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஹரிந்தர் பால் சிங்கிடம் சிங்கப்பூர் நிதி நிறுவனத்திடம் இருந்து ரூபாய் 70 கோடி கடன் வாங்கி தருவதாகக் கூறி 1.40 கோடி மோசடி செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து 1.10 லட்சம் ரொக்கம் மற்றும் அதிநவீன பார்ச்சுனர் காரையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அந்த விசாரணையில் பாஜக மாநில நிர்வாகி ராஜசேகர் மீது வேலை வாங்கி தருவதாக மோசடி, கடன் மோசடி, கட்டப்பஞ்சாயத்து என்று மொத்தம் ஏழு வழக்குகள் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நிலுவையில் உள்ளது தெரிய வந்ததுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

four peoples arrested for money fraud in himachal pradesh


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->