சோகம்... காரில் விளையாடிய 4 குழந்தைகள் உயிரிழப்பு.!! - Seithipunal
Seithipunal


ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள விஜயநகரம் கண்டோன்மென்ட் கீழ் உள்ள துவாரபுடி கிராமத்தில் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்தக் காரில் அருகில் விளையாடிக்கொண்டிருந்த சில சிறுவர்கள் ஏறியுள்ளனர். 

அப்போது, எதிர்பாராத விதமாக கதவு உள் பக்கமாக பூட்டிக்கொண்டுள்ளது. இதனால் சிறுவர்களால் வெளியில் வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே காலையிலிருந்து குழந்தைகளைக் காணாததால், பெற்றோர்கள் பல இடங்களில் தேடிக்கொண்டிருந்தனர். 

இந்த நிலையில், பெற்றோர்கள் அங்கிருந்த காரில் பார்த்தப்போது 4 சிறுவர்களும் மயக்க நிலையில் கிடந்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் குழந்தைகளை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றபோது குழந்தைகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. 

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், ஒரு குடும்பத்தினர் திருமணத்தில் கலந்து கொள்ள வந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

four childrens died for breething issue in andra pradesh


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->