நள்ளிரவில் பற்றி எரிந்த ரெஸ்டாரண்ட் - பரிதாபமாக பறிபோன 42 உயிர்.!
forty two peoples died for fire accident in bangaladesh
வங்காளதேசம் மாநிலத்தின் தலைநகர் டாக்காவில் ஏழு மாடி கட்டடம் ஒன்று உள்ளது. இந்தக் கட்டடத்தின் முதல் தளத்தில் ரெஸ்டாரன்ட் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்த ரெஸ்டாரன்டில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தத் தீ சில நிமிடத்திலேயே மளமளவென அனைத்து மாடிகளுக்கும் பரவியது. இந்த விபத்தில் 150 க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவித்தனர். இந்த சம்பவம் குறித்து தீயணைப்புத் துறை மற்றும் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தத் தகவலின் படி 35-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
பின்னர் கட்டடத்தில் சிக்கித் தவித்த 75 பேரை மீட்டனர். அவர்களில் 42 பேர் மயக்க நிலையிலும், 22 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும், இந்த தீ விபத்தில் 43 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த தீ விபத்துக்கு குறித்து போலீசார் அழகு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்தத் திடீர் தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
forty two peoples died for fire accident in bangaladesh