திடீர் பரபரப்பு! ரெயில் பெட்டிகளில் பரவிய தீ ...! பயணிகள் இல்லாததால் பெரிய சேதம் தவிர்ப்பு...!
Fire spreads train coaches No passengers major damage avoided
மேற்கு வங்கம் மாநிலத்தின் புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள கட்வா ரெயில் நிலையம் இன்று அதிகாலை திடீர் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் தீ விபத்து சம்பவம் நடந்தது.
அதிகாலை சுமார் 4.30 மணியளவில், நிலையத்தின் 2-வது நடைமேடையில் அமைதியாக நின்று கொண்டிருந்த கட்வா – அசிம்கஞ்ச் பயணிகள் ரெயிலின் ஒரு பெட்டியில் எதிர்பாராத விதமாக தீ முளைத்தது. சில நொடிகளில் புகை சூழ்ந்து, தீ வேகமாக பரவத் தொடங்கியதால் அங்கிருந்தோர் பதற்றமடைந்தனர்.

ஆனால் சூழ்நிலையை சமாளிக்க விரைந்த இரயில்வே ஊழியர்கள் துரித நடவடிக்கை எடுத்து, தீப்பற்றிய அந்த பெட்டியை மற்ற பெட்டிகளில் இருந்து உடனடியாக பிரித்து பெரிய ஆபத்தைத் தடுத்தனர்.
தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் போராடி தீயை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதிர்ஷ்டவசமாக, தீ விபத்து ஏற்பட்ட போது அந்த பெட்டி காலியாக இருந்ததால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதற்கான துல்லிய காரணத்தை கண்டறிய இரயில்வே அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Fire spreads train coaches No passengers major damage avoided